Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

குற்றியலுகரம்

குற்றியலுகரம் = குறுமை+இயல் +உகரம்

குற்றியலுகரத்தில் வரும் உகரம் தன்னுடைய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாக குறைந்து ஒலிப்பது குற்றியலுகரம் ஆகும்.

மாத்திரை என்றால் என்ன? 

எழுத்துக்களை  ஒலிக்க ஆகும் காலஅளவு மாத்திரை எனப்படும்.

எழுத்துகள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. மாத்திரை எனப்படுவது ஒருவன்,

இயல்பாக கண் இமைக்கும் நேரமும் மற்றும் இயல்பாக கை நொடிக்கும் நேரமும் 1 மாத்திரை அளவு ஆகும்.

எண்

எழுத்துக்கள்

ஒலிக்கும் மாத்திரை அளவு

1

குறில் எழுத்துக்கள் எ.கா: அ, இ, ப, கி, மு

ஒன்று (1)

2

நெடில் எழுத்துக்கள் எ.கா: ஆ, ஈ, ஏ, கா, வா, போ

இரண்டு(2)

3

மெய்யெழுத்துகள் எ.கா: க்,ங்,ல்,ஞ்,ட்

அரை(½)

4

ஆய்த எழுத்து எ.கா: ஃ

அரை(½)

5

குற்றியலுகரம் எ.கா: கு, சு, டு, து, பு, று , குற்றியலிகரம்

அரை(½)

6

உயிரளபெடை

மூன்று(3)

7

ஒற்றளபெடை

ஒன்று (1)

8

ஔகாரக்குறுக்கம், ஐகாரக்குறுக்கம்

ஒன்று அல்லது ஒன்றரை (1 அல்லது 1½)

9

மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்

கால் (¼)

குற்றியலுகரம் எவ்வாறு உருவாகும் என்றால் வல்லின எழுத்துக்களான 

(க்,ச்,ட்,த்,ப்,ற்) உடன் ‘உ’ சேர்க்கும்போது குற்றியலுகரம் எழுத்துக்கள் உருவாகும்.

அதாவது  க்+உ=கு, ச்+உ=சு, ட்+உ=டு, த்+உ=து, ப்+உ=பு, ற்+உ=று   

கு,சு,டு,து,பு,று - குற்றியலுகரம் எழுத்துக்கள்

எ.கா: 

  1. நாடு 

  2. பந்து

  3. கொடுக்கு 

  4. பேச்சு

  5. நேற்று

  6. சிறப்பு  

    மேற்கண்ட எடுத்துக்காட்டுகளில், குறைந்து ஒலிக்கும் உகரமே குற்றியலுகரம்.

குற்றியலுகரம் ஆறு வகைப்படும் அவை, 

  1. நெடிற்றொடர்க் குற்றியலுகரம்

  2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்

  3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்

  4. வன்தாெடர்க் குற்றியலுகரம்

  5. மென்தாெடர்க் குற்றியலுகரம்

  6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்

1.நெடிற்றொடர்க் குற்றியலுகரம்:

தனி நெடிலை தொடர்ந்து வரும் உகரம் நெடிற்றொடர்க் குற்றியலுகரம் ஆகும்.

எ.கா: 1. பாகு, 2. வீசு, 3. காடு, 4. காது, 5.கோபு, 6. ஆறு 

மேற்கண்ட சொற்களில் நெடில் எழுத்தை  தொடர்ந்து வந்த உகரம் தனக்குரிய ஒரு மாத்திரையிலிருந்து அரை மாத்திரையாகக் குறைந்து ஒலிக்கிறது. இதற்கு "நெடிற்றொடர்க் குற்றியலுகரம்" என்று பெயர்.

 பாகு - இதில் ‘பா’ என்னும் நெடில் எழுத்தை தொடர்ந்து வந்த உகரம் ‘கு’ என்பதால் இது நெடிற்றொடர்க் குற்றியலுகரம்.

2. ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம்: ஆய்த எழுத்தைத் தொடர்ந்து வருவது ஆய்தத் தொடர்க் குற்றியலுகரமாகும்.

எ.கா: 1. எஃகு, 2.அஃது 

மேற்கண்ட சொற்களில் ஆயுதஎழுத்தை ‘ஃ’ தொடர்ந்து வந்த உகரம் ‘கு’ என்பதால் இது ஆய்தத் தொடர்க் குற்றியலுகரம் என்று பெயர்.

3. உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்: உயிரெழுத்தைத் தொடர்ந்து (ழ்+அ=ழ, ர்+அ=ர, ப்+ஆ=பா, ன்+அ=ன, ர்+உ=ரு. ல்+ஆ=லா) ஈற்றில் குறைந்து ஒலிப்பதினால் குற்றியலுகரமாயிற்று. இவ்வாறு உயிரெழுத்தைத் தொடர்ந்து வருவது உயிர்த்தொடர்க் குற்றியலுகரமாகும்.

  எ.கா: 1. வரலாறு 2. ஒன்பது 3.பண்பாடு 4. அரசு 

4. வன்தாெடர்க் குற்றியலுகரம்: வல்லின மெய்யெழுத்துகளைத் (க், ச், ட், த், ப், ற்) தொடர்ந்து வரும் உகரம் வன்றொடர்க் குற்றியலுகரமாகும்.

 எ.கா: 1.  நாக்கு 2. பாட்டு 3. பத்து 4.உப்பு 5.பற்று 6. கச்சு

இதில் வல்லின மெய்யெழுத்துகளைத் (க், ச், ட், த், ப், ற்) தொடர்ந்து வரும் உகரம் வன்தாெடர்க் குற்றியலுகரம் எனப்படும்.

5. மென்தாெடர்க் குற்றியலுகரம்: மெல்லின மெய்யெழுத்துகளைத் (ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்)  தொடர்ந்து வரும் உகரம் மென்தாெடர்க் குற்றியலுகரமாகும்.

எ.கா: 1. பங்கு 2.மஞ்சு 3.பண்பு 4. பந்து 5.அம்பு 6. கன்று 

இதில் மெல்லின மெய்யெழுத்துகளைத் (ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்) தொடர்ந்து வரும் உகரம் மென்தாெடர்க் குற்றியலுகரமாகும்.

6. இடைத்தொடர்க் குற்றியலுகரம்: இடையின மெய்யெழுத்துகளைத்  (ய், ர், ல், வ், ழ், ள்) தொடர்ந்து வரும் உகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரமாகும்.

எ.கா: 1. எய்து 2. சார்பு 3.சால்பு 4. மூழ்கு

இதில் இடையின மெய்யெழுத்துகளைத்  (ய், ர், ல், வ், ழ், ள்) தொடர்ந்து வரும் உகரம் இடைத்தொடர்க் குற்றியலுகரமாகும்.


This content is licensed under
CC BY-SA 4.0 What does that mean? serlo.org