Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

முற்றியலுகரம்

முற்றியலுகரம் என்றால் என்ன?

தன் இயல்பான ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாமல் ஒலிக்கும் உகரம் முற்றியலுகரமாகும்.

மாத்திரை என்றால் என்ன?

எழுத்துக்களை ஒலிக்க ஆகும் காலஅளவு மாத்திரை எனப்படும்.

எழுத்துகள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. மாத்திரை எனப்படுவது ஒருவன்,

இயல்பாக கண் இமைக்கும் நேரமும் மற்றும் இயல்பாக கை நொடிக்கும் நேரமும் 1 மாத்திரை அளவு ஆகும்.

எண்

எழுத்துக்கள்

ஒலிக்கும் மாத்திரை அளவு

1

குறில் எழுத்துக்கள் எ.கா: அ, இ, ப, கி, மு

ஒன்று (1)

2

நெடில் எழுத்துக்கள் எ.கா: ஆ, ஈ, ஏ, கா, வா, போ

இரண்டு(2)

3

மெய்யெழுத்துகள் எ.கா: க்,ங்,ல்,ஞ்,ட்

அரை(½)

4

ஆய்த எழுத்து எ.கா: ஃ

அரை(½)

5

குற்றியலுகரம் எ.கா: கு, சு, டு, து, பு, று , குற்றியலிகரம்

அரை(½)

6

உயிரளபெடை

மூன்று(3)

7

ஒற்றளபெடை

ஒன்று (1)

8

ஔகாரக்குறுக்கம், ஐகாரக்குறுக்கம்

ஒன்று அல்லது ஒன்றரை (1 அல்லது 1½)

9

மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்

கால் (¼)

முற்றியலுகரம் எவ்வாறு வரும்?

  1. தனிக்குறிலை அடுத்து சொல்லின் இறுதியில் வரும் வல்லின உகரம் (கு,சு,டு,து,பு,று) தன் இயல்பான மாத்திரை அளவிலேயே (ஒரு மாத்திரை) ஒலிக்கும்.  எ.கா: 1. எடு 2. பசு 3. அது 4. பெறு.

    இதில் வல்லின உகரம் (கு,சு,டு,து,பு,று) முன் வரும் எழுத்துக்கள் எல்லாம் தனிக்குறில் எழுத்துக்களாகும்.

  2. பொதுவாக சொற்களின் இறுதியில் மெல்லின மெய்யின் (ஙு,ஞு,ணு,நு,மு,நு) மேல் ஊர்ந்து வரும் உகரமும், இடையின மெய்யின் (யு ரு லு வு ழு ளு) மேல் ஊர்ந்து வரும் உகரமும் முற்றியலுகரம் எனப்படும்.            

    எ.கா: 1.உண்ணு 2. உருமு  (மெல்லின மெய்யின் உகரம்)           

    எ.கா: 1. தள்ளு 2. கதவு (இடையின மெய்யின் உகரம்)

குற்றியலுகரம்-முற்றியலுகரம்-வேறுபாடு

எண்

குற்றியலுகரம்

முற்றியலுகரம்

1

குற்றியலுகரத்தில் வரும் உகரம் தன்னுடைய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாக குறைந்து

முற்றியலுகரம் தன் இயல்பான ஒரு மாத்திரை அளவிலிருந்து குறையாமல் ஒலிக்கும் உகரம்.

2

வல்லின எழுத்துக்களான

(க்,ச்,ட்,த்,ப்,ற்) உடன் ‘உ’ சேர்க்கும்போது குற்றியலுகரம் எழுத்துக்கள் (கு,சு,டு,து,பு,று) உருவாகும்.

தனிக்குறில் அடுத்து சொல்லின் இறுதியில் வரும் வல்லின மெய் மேல் ஊர்ந்து வரும் உகரமும்(கு,சு,டு,து,பு,று), பொதுவாக சொற்களின் இறுதியில் மெல்லின மெய்யின் மேல் ஊர்ந்து வரும் உகரமும்(ஙு,ஞு,ணு,நு,மு,நு), இடையின மெய்யின் மேல் ஊர்ந்து வரும் உகரமும் (யு,ரு,லு,வு,ழு,ளு) உருவாகும்.


This content is licensed under
CC BY-SA 4.0 What does that mean? serlo.org