Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

குற்றியலிகரம்

குற்றியலிகரம் - குறுமை+இயல்+இகரம்

குற்றியலிகரத்தில் வரும் இகரமானது தன்னுடைய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாக குறைந்து ஒலிப்பது குற்றியலிகரம் ஆகும்.

மாத்திரை என்றால் என்ன?

எழுத்துக்களை ஒலிக்க ஆகும் காலஅளவு மாத்திரை எனப்படும்.

எழுத்துகள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. மாத்திரை எனப்படுவது ஒருவன்,

இயல்பாக கண் இமைக்கும் நேரமும் மற்றும் இயல்பாக கை நொடிக்கும் நேரமும் 1 மாத்திரை அளவு ஆகும்.

எண்

எழுத்துக்கள்

ஒலிக்கும் மாத்திரை அளவு

1

குறில் எழுத்துக்கள் எ.கா: அ, இ, ப, கி, மு

ஒன்று (1)

2

நெடில் எழுத்துக்கள் எ.கா: ஆ, ஈ, ஏ, கா, வா, போ

இரண்டு(2)

3

மெய்யெழுத்துகள் எ.கா: க்,ங்,ல்,ஞ்,ட்

அரை(½)

4

ஆய்த எழுத்து எ.கா: ஃ

அரை(½)

5

குற்றியலுகரம் எ.கா: கு, சு, டு, து, பு, று , குற்றியலிகரம்

அரை(½)

6

உயிரளபெடை

மூன்று(3)

7

ஒற்றளபெடை

ஒன்று (1)

8

ஔகாரக்குறுக்கம், ஐகாரக்குறுக்கம்

ஒன்று அல்லது ஒன்றரை (1 அல்லது 1½)

9

மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம்

கால் (¼)

குற்றியலிகரம் எவ்வாறு உருவாகும்?

நிலைமொழியின் ஈற்றெழுத்து குற்றியலுகரமாகவும் வருமொழியின் முதலெழுத்து யகரமாகவும் இருந்தால், அவையிரண்டும் புணரும்போது நிலைமொழி ஈற்றிலுள்ள குற்றியலுகரம் இகரமாகத் திரியும். 

எ.கா:

  1. நாடு+யாது = நாடியாது 

  2. கொக்கு+யாது = கொக்கியாது

இதில் “நாடு” - “நிலைமொழி” அதனுடைய ஈற்றெழுத்து ‘டு’ (ட்+உ) குற்றியலுகரமாகும் மற்றும் அந்த சொல் நெடில்தொடர் குற்றியலுகரம். 

அதேபோல் “யாது” - “வருமொழி” இதனுடைய முதலெழுத்து “யா” யகரம் ஆகும். இந்த இரண்டும் சேரும்போது “நாடியாது” என ஆயிற்று. 

இதில்  ‘டு’ (ட்+உ) உகரம் டி(ட்+இ) இகரமாக திரிந்து இது குற்றியலிகரமாயிற்று.

அவ்வாறு திரிந்த இகரம் அரை மாத்திரையளவே ஒலிக்கும். அவ்வாறு குறைந்தொலிக்கும் இகரம் குற்றியலிகரம் ஆகும். இதனை இவ்வாறாகவும் கூறலாம் - அதாவது நிலைமொழி முதலில் வரும் சொல் நெடில்தொடர் குற்றியலுகரமாக இருந்தால் வருமொழி முதலில் இகரம் வந்தால் உகரம் இகரமாக திரியும்.

குற்றியலுகரம்- குற்றியலிகரம்-வேறுபாடு

எண்

குற்றியலுகரம்

குற்றியலிகரம்

1

குற்றியலுகரத்தில் வரும் உகரம் தன்னுடைய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாக குறைந்து ஒலிப்பது குற்றியலுகரம் ஆகும்.

குற்றியலிகரத்தில் வரும் இகரமானது தன்னுடைய ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவாக குறைந்து ஒலிப்பது குற்றியலிகரம் ஆகும்.

2

குற்றியலுகரத்தில் வல்லின எழுத்துக்களான

(க்,ச்,ட்,த்,ப்,ற்) உடன் ‘உ’ சேர்க்கும்போது குற்றியலுகரம் எழுத்துக்கள் கு,சு,டு,து,பு,று உருவாகும்.

குற்றியலிகரத்தில் வருமொழி முதல் எழுத்து யகரம் வரவேண்டும்.

3

குற்றியலுகரம் ஆறு வகைப்படும்.

குற்றியலிகரத்தில் வகைகள் ஏதும் இல்லை.


This content is licensed under
CC BY-SA 4.0 What does that mean? serlo.org