Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

இடம்

தமிழ் இலக்கணம் மூவிடங்களைப் பற்றிக் கூறுகிறது. அவை தன்மை, முன்னிலை, படர்க்கை என்பனவாகும்.

1. தன்மை

பேசுபவரைக் குறிப்பது தன்மை எனப்படும். 

தன்மை இரண்டு வகைப்படும்:

1. தன்மை ஒருமை (நான், யான்)

2. தன்மை பன்மை (நாம், நாங்கள்)

எ. கா. :

  1. நான் உலகை இரசிக்கிறேன். (தன்மையில் ஒருமை)

  2. நாங்கள் காடுகளை ஆராய்கிறோம். (தன்மையில் பன்மை)

  3. நான் பத்திரிகை படித்துக் கொண்டிருக்கிறேன். (தன்மையில் ஒருமை)

  4. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். (தன்மையில் பன்மை)

Image

2. முன்னிலை

தனக்கு முன்னால் இருந்து கேட்பவரைக் குறிப்பது முன்னிலை எனப்படும். 

முன்னிலை இரண்டு வகைப்படும்: 

1. முன்னிலை ஒருமை (நீ)

2. முன்னிலை பன்மை (நீங்கள், நீர், நீவிர், நீயிர்)   

எ. கா. :

நீ என் செல்லப் பிள்ளை. (முன்னிலை ஒருமை)

நீங்கள் இயற்கையை நேசிக்க வேண்டும். (முன்னிலை பன்மை)   

நீ தினமும் நூல்கள் வாசிக்க வேண்டும். (முன்னிலை ஒருமை)

நீவிர் சிறப்பாக கால்பந்து விளையாடுகிறீர். (முன்னிலை பன்மை)

Image

3. படர்க்கை

பேசுபவர் அல்லது கேட்பவர் இவ்விருவரையும் தவிர மற்றவர்களை அல்லது மற்றவற்றைக் குறிப்பது படர்க்கை எனப்படும். 

இது இரண்டு வகைப்படும்: 

1. படர்க்கை ஒருமை (அவன், அவள், அது, அவர்)

2. படர்க்கை பன்மை (அவர்கள், அவை)

எ. கா. :

அவர் நல்ல மனிதர். (படர்க்கை ஒருமை)

அவள் ஒழுக்கத்தில் சிறந்தவள். (படர்க்கை பன்மை) 

அது புலி. (படர்க்கை ஒருமை)

அவன் புத்தகம் படிக்கிறான். (படர்க்கை ஒருமை)

அவர்கள் நூலகம் போகிறார்கள். (படர்க்கை பன்மை)

அவை அழகான பூனைக் குட்டிகள்! (படர்க்கை பன்மை)

Image

This content is licensed under
CC BY-SA 4.0 What does that mean? serlo.org