Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

தத்தம் பொருள் உணர்த்தும் இடைச் சொற்கள்

உம், ஓ, ஏ, தான், மட்டும், ஆவது, கூட, ஆ, ஆம்

இடைச்சொல் தனியே நின்று பொருள் உணர்த்தாது என்பதை முன்பு கூறியிருந்தோம். ஆனால் விதிவிலக்காக  பெயரோடு அல்லது வினையோடு சேர்ந்து நின்று, சில இடைச்சொற்கள் சில பொருள்களை உணர்த்தும். இவற்றையே தத்தம் பொருளை உணர்த்துவன என நன்னூலார் குறிப்பிடுகின்றார்.

உம் 

உம்  இடைச்சொல், ஒரு வாக்கியத்தில்  பெயருக்கு அடையாக வரும் சொற்கள், முற்றுவினைகள் தவிர்ந்த பிறசொற்களுடன் இணைந்த வந்து  வெவ்வேறு பொருளைத் தருகின்றது. இது வாக்கியத்தில் இணைப்பிடைச்  சொல்லாகவும் பயன்படுகின்றது.

 உம்  இடைச்சொல் பின்வரும் எட்டுப் பொருள்களில் வரும் என நன்னூல் கூறுகின்றது. எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, எண்ணல், தெரிநிலை, ஆக்கம்

Quote

"எதிர்மறை சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, எண்ணல், தெரிநிலை, ஆக்கமோடு உம்மை எட்டே”

நன்னூல் சூத்திரம் ‍ #425

1.

எதிர்மறை:

மழை பெய்தும் புழுக்கம் குறையவில்லை.

2.

சிறப்பு:

கவிஞர் போற்றும் கவிஞன்.

3.

ஐயம்:

மழை பெய்தாலும் பெய்யும்.

4.

எச்சம்:

கண்ணனும் வந்தான். இங்கு உம் என்ற இடைச்சொல் பிரிதொன்றைத் தழுவி நிற்பதால் இதனை எச்சம் என்பர்.

5.

முற்று:

எல்லோரும் வந்தார்கள்.

6.

எண்ணல்:

மூன்றும் இரண்டும் ஐந்து

7.

தெரிநிலை:

இதில் ஆராய்ச்சியும் இல்லை விமர்சனமும் இல்லை. இங்கு வெளிப்படையாக விடயத்தை கூறுவதானால் இதனை தெரிநிலை என்பர்.

8.

ஆக்கம்:

எழுதுவது தான் அவரது தொழில் ஒன்றே பிறிதொன்றாகவும் ஆவதை சுட்டுவது ஆக்கம் என்பர்.


This content is licensed under
CC BY-SA 4.0 What does that mean? serlo.org