சொல்வகைகள்
சொல் அல்லது பதம்
தனி ஓர் எழுத்தினாலோ அல்லது பல எழுத்துக்களினால் சேர்ந்தோ பொருள் தந்து - ஓர்அர்த்தத்தின் குறியீடாக அமைவது சொல். இது பதம், மொழி , கிளவி என்று வேறு பெயர்களிலும் அழைக்கப்படும்.
தமிழ் இலக்கணத்தில் நான்கு சொல்வகைகள் உண்டு.

பெயர்ச்சொல் என்பது பொருட்கள், இடங்கள், காலங்கள், சினைகள், குணங்கள், தொழில்கள் என்பவற்றை உணர்த்தும் சொல்லாகும். இப்பெயர்ச்சொல்லின் சிறப்பு இது வேற்றுமை உருபாகவும் அமைவதாகும்.
வினைச்சொல் என்பது ஒரு பொருளின் வினையை (செயலை) குறிக்கும் சொல்லாகும். ஓர் செயல் முடிவு பெற்றதை உணர்த்தினால் வினை முற்று என்றும் ஒரு செயல் முடிவு பெறாத நிலையை உணர்த்தினால் அது வினை எச்சம் என்றும் அழைக்கப்படும்.
இடைச்ச ொல் பெயர்ச்சொல்லிற்கும் வினைச்சொல்லிற்கும் இடையில் அல்லது முன்னும் பின்னும் இருந்து பொருளை விளக்கும் சொல் இடைச்சொல் எனப்படும். இவை தனித்திருந்து பொருள்தராது.
உரிச்சொல் உரிச்சொல் என்பது, ஒன்றுக்கு ஒன்று உரிமை உடையதாக விளங்கும் சொல்.
இவை தவிர இலக்கியத்தில் மேலும் நான்கு சொல்வகைகள் உண்டு.

இயற்சொல் என்பது தமிழில் காலம் காலமாக வழங்கி வரும் சொற்கள்.
திரிசொல் என்பது ஒரு பொருள் குறித்த பல சொல்லாகவும், பல பொருள் குறித்த ஒரு சொல்லாகவும் வரும் சொற்கள்.
திசைச்சொல் என்பது வடமொழி தவிர்ந்த பிற பகுதிகளில் பேசப்படும் மொழிகளிலிருந்து வந்து தமிழ்மொழியில் கலந்து வரும் சொற்கள்.
வடசொல் என்பது வடதிசை மொழியான சமஸ்கிருதம் எனப்படும் ஆரிய மொழியிலிருந்து தமிழில் கலந்து வழங்கும் சொற்கள்.