சுட்டெழுத்துக்கள்
சுட்டெழுத்து என்பது ஒரு பொருளையோ, மனிதரையோ, வேறு உயிரினங்களையோ சுட்டிக்காட்டுவது ஆகும்.
உயிரெழுத்துக்களாகிய “அ, இ, உ” என்பன சுட்டெழுத்துக்கள் ஆகும்.
எ + கா: அவன் , இவன், உவன்

1) அருகில் இருப்பவற்றைச் சுட்டிக்காட்டுவதை அண்மைச்சுட்டு எனப்படும்.
அருகில் உள்ளவற்றைக் குறிப்பிடுவதற்கு நாங்கள் எப்போதும் “இ” என்னும் சுட்டெழுத்தில் ஆரம்பிக்கும் “இங்கு, இவர்கள், இது …” போன்ற சொற்கள ை உபயோகிக்கிறோம்.
2) தொலைவில் இருப்பவற்றைக் குறிப்பது சேய்மைச்சுட்டு எனப்படும். தொலைவில் உள்ளவற்றைக் குறிப்படுவதற்கு நாங்கள் எப்போதும் “அ” என்னும் சுட்டெழுத்தில் ஆரம்பிக்கும் “அங்கு, அவர்கள், அது “ போன்ற சொற்களை உபயோகிக்கின்றோம்.
3) ஒரு சொல்லின் அகத்தே (உள்ளே) நின்று சுட்டுப்பொருளைத் தருவது அகச்சுட்டு எனப்படும். இவ்வகைச் சொல்லில் அடங்கியுள்ள சுட்டெழுத்தைப் பிரித்து விட்டால் அது பொருள் சுட்டாது.
எ + கா: அவன் = அ + வ் + அன்
அவன் = வன் ( → பொருள் இல்லை)
4) ஒரு சொல்லின் புறத்தே (வெளியே) இருந்து பொருள் தருவது புறச்சுட ்டு எனப்படும். இவ்வகைச் சொல்லில் உள்ள சுட்டெழுத்தைப் பிரித்துவிட்டாலும் அது பொருள் சுட்டும்.
எ + கா: அக்குதிரை = அ + குதிரை
அக்குதிரை = குதிரை (→ பொருள்)
இப்புத்தகம் = இ + புத்தகம்
இப்புத்தகம் = புத்தகம் (→ பொருள்)
(குறிப்பு: 'அ, இ' ஆகிய இரண்டு சுட்டுகள் மட்டுமே இன்றைய வழக்கில் உள்ளன. ‘உ’ எனும் சுட்டு இன்றைய வழக்கில் பயன்படுத்தப்படுவதில்லை.)