வினாவெழுத்துக்கள்
வினா எழுத்துகள் ஐந்து. அவை ‘எ, ஏ, யா, ஆ, ஓ’ ஆகும்.
இவை சொல்லின் முதலில் அல்லது இறுதியில் வரும்.
i. எ,யா → சொல்லின் முதல் எழுத்தாக வரும்.
எ + கா: எது? யாது?
ii. ஆ, ஓ → சொல்லின் இறுதி எழுத்தாக வரும்.
எ + கா: அவனா? (அவன் + ஆ)
அதுவோ? (அது + ஓ)
iii. ஏ → சொல்லின் முதலிலும் இறுதியிலும் வரும்.
எ+கா: ஏன் சென்றாய்?
அவன் செய்தது நல்லதுதானே? (நல்லது + தான் + ஏ)

அகவினா = சொல்லின் உள்ளிருந்து வினாப்பொருளைத் தரும். இந்தச் சொல்லில் இருந்து வினா எழுத்தைப் பிரிக்க முடியாது. பிரித்தால் பொருள் தராது.
எ+கா: யார்? ஏன்?
புறவினா = சொல்லின் புறத்தே இருந்து வினாப்பொருளைத் தரும்.
இந்தச் சொல்லில் இருந்து வினா எழுத்தைப் பிரிக்க முடியும். பிரித்தால் பொருள் தரும்.
எ+கா: கள்வனோ = கள்வன் + ஓ