Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

இடைச்சொல்

தமிழ் இலக்கணத்தில் நான்கு சொல்வகைகள் உண்டு.

சொல்வகைகள்

இவை தவிர இலக்கிய வழக்கில் மேலும் நான்கு வகைகள் உண்டு .

இலக்கிய வழக்கில்

பெயர்ச்சொல், வினைச்சொல் இவற்றை இடமாகக் கொண்டு, அவற்றைச் சார்ந்து வருகின்ற இடைச்சொல், உரிச்சொல் குறித்து இனி விரிவாகப் பார்க்கலாம்.

இடைச்சொல் என்றால் என்ன?

பெயர்ச்சொல்லிற்கும் வினைச்சொல்லிற்கும் இடையில் அல்லது  முன்னும் பின்னும் இருந்து பொருளை விளக்கும் சொல் இடைச்சொல் எனப்படும்.

இவை தனித்திருந்து பொருள்தராது.

இடைச்சொல் என்றால் என்ன?

இடைச்சொற்கள் எட்டு வகைப்படும். அவையாவன:

Quote

இடைச் சொல்லின் பொது இலக்கணம்:

வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள்

தத்தம் பொருள இசைநிறை அசைநிலை

குறிப்பெனெண் பகுதியிற் றனித்திய லின்றிப்

பெயரினும் வினையினும் பின்முன் னோரிடத்து

ஒன்றும் பலவும்வந் தொன்றுவ திடைச்சொல்

நன்னூல் சூத்திரம் ‍ #419


This content is licensed under
CC BY-SA 4.0 What does that mean? serlo.org