Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

தனிச்சொல்லியம் தொடர்ச்சொல்லியம்  

தனிச்சொல்லியம் 

எ + கா : தம்பி பள்ளிக்குச் சென்றான். 

தம்பி பாடம் படித்தான்.

இதில் முதலாவது சொல்லியத்தில் “தம்பி” என்னும் சொல் எழுவாய் ஆகும். “சென்றான்” என்பது அதற்குரிய பயனிலை ஆகும். அதேபோல் இரண்டாவது சொல்லியத்திலும் ஒரே ஒரு எழுவாயும்  அதற்கு ஏற்றவாறு ஒரே ஒரு பயனிலையும் உள்ளது. இதுவே தனிச்சொல்லியம் ஆகும்.

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிச்சொல்லியங்கள் இணைந்து வந்தால் அது தொடர்ச்சொல்லியம் எனப்படும். அதாவது ஒர் எழுவாய் பல செயல்களைக் குறித்து நிற்பின் அது தொடர்ச்சொல்லியம்  என்று அழைக்கப்படும். 

 

தொடர்ச்சொல்லியம்

மேலுள்ள தனிச்சொல்லியங்களைச் சேர்த்து எழுதினால்:

எ+கா: தம்பி பள்ளிக்குச் சென்று, பாடம் படித்தான்.

இதில் “தம்பி” என்னும் சொல் எழுவாய் ஆகவும், “சென்று” மற்றும் “படித்தான்”  அதற்குரிய செயல்களாகவும் அமைகின்றன. ஆனால் இரண்டு செயல்களும் ஒரே மாதிரி இல்லாமல், “சென்று” என்பது வினையெச்சமாகவும், “படித்தான்” என்பது வினைமுற்றாகவும் வந்து இந்த சொல்லியம் அமைகிறது . 

தொடர்ச்சொல்லியம் இரண்டு அல்லது பல செயல்களைக் கொண்டு அமையலாம். 

எ+ கா: எழிலி புதிய ஆடை அணிந்து, கொண்டாட்டத்திற்குச் சென்று, அங்கே அவளது நண்பர்களுடன் உரையாடினாள்.


This content is licensed under
CC BY-SA 4.0 What does that mean? serlo.org