சொற்புணர்ச்சி
தைப்பொங்கல் என்னும் சொல் “தை “ மற்றும் “பொங்கல் ” ஆகிய இரு சொற்களால் இணைந்து வருவதாகும். இதில் இரண்டு சொற்கள் புணர்ந்து, அதாவது சேர்ந்து வருகின்றன. இதுவே சொற்புணர்ச்சி எனப்படும்.
இரு சொற்கள் சேரும்போது அவை மாற்றங்களுடனும் அல்லது இயல்பாக, அதாவது எந்தவித மாற்றங்களும் இன்றி அமையலாம். சொற்புணர்ச்சி இரண்டு வகைப்படும். அவை இயல்புப்புணர்ச்சி, மாறுபடுபுணர்ச்சி என்பனவாகும்.
முதலாவது சொல்லிலும் இரண்டாவது சொல்லிலும் மாற்றங்கள் இல்லாவிட்டால் அது இயல்புப்புணர்ச்சி எனப்படும்.
எ + கா: கோயில் + மணி = கோயில்மணி
மணல் + வீடு = மணல்வீடு
தமிழ் + ஈழம் = தமிழீழம் (இதில் இரண்டு எழுத்துக்கள் இணைகின்றன (ழ்+ஈ=ழீ) . ஆனால், புதிய மாற்றங்கள் எதுவும் இல்லை)
இரு சொற்கள் புணரும்போது அந்த சொற்களில் மாற்றங்களும் உண்டாகலாம். அவ்வாறே மாறுபடுபுணர்ச்சியை மூன்றாக வகுக்கலாம்: தோன்றற்புணர்ச்சி, திரிதற்புணர்ச்சி, கெடுதற்புணர்ச்சி.
1.இரண்டு சொற்கள் இணையும்போது இடையில் ஓர் எழுத்து தோன்றுவது தோன்றற்புணர்ச்சி எனப்படும். அவை கூடுதலாக ப், க் , ம், ந் ஆகிய மெய்யெழுத்துக்களாவே இருக்கும். எ + கா:
2.திரிதற்புணர்ச்சியில் முதலாவது சொல்லின் இறுதி எழுத்தும் இரண்டாவது சொல்லின் முதலாவது எழுத்தும் ஒன்றுசேர்வதனால், முதலாவது சொல்லின் கடைசி எழுத்து மாறுபடுகின்றது. எ + கா:
3. கெடுதற்புணர்ச்சி என்பது, இரு சொற்கள் இணையும்போது முதலாவது சொல்லின் கடைசி எழுத்து மறைவது ஆகும். இரண்டாவது சொல் எவ்வித மாற்றமும் இன்றி முதலாவது சொல்லுடன் சேரும். எ + கா: