Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

ஆங்கிலேயரின் ஆசிய வருகை

ஆசியாவிலிருந்து வரும்  பட்டு, இறப்பர்,தேயிலை மற்றும் வாசனைத் திரவியங்களுக்கு ஐரோப்பியர்கள் மத்தியில் பெரும்கேள்வி இருந்தது. அதனால் பல ஐரோப்பிய நாடுகள் ஆசியாவில் தமது வர்த்தக உரிமையை நிலைநாட்டுவதற்கு வருகை தந்தன.

அதில் வர்த்தகத்தினை நோக்கமாகக் கொண்டு ஆசியாவுக்கு வருகை தந்த ஐரோப்பியர்களில் பிரித்தானியர்கள் முக்கிய இடம் வகிக்கின்றனர் . 

வர்த்தகத்தின் மூலம் அதிக இலாபத்தைப் பெறும் நோக்கத்துடன் 1600 ஆம் ஆண்டில் ஆங்கிலயேர்கள் பிரித்தானிய கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனியை  நிறுவினர்.

இலங்கையின் மீது கவனம் ஈர்க்கப்படுதல்

இலங்கை இந்து சமுத்திரத்தின் முத்து என்று அழைக்கப்படுகிறது . இவ்வாறு அழைக்கப்படுவதற்கான பிரதான காரணம் இலங்கைத்தீவின்  இயற்கை அழகாகும். அதே சமயம் இலங்கையின் கேத்திர நிலைய அமைவிடம்  மற்றும்  இயற்கையான வளங்கள் காரணமாக இந்து சமுத்திரத்தில் தனிப்பெரும் சிறப்பைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

1664 இல் பிரான்ஸ், பிரெஞ்சு கிழக்கிந்திய வர்த்தகக் கம்பனி  ஒன்றையும் உருவாக்கினர்.

இதனால் தெற்கு ஆசியாவில் வர்த்தக உரிமையினை பெற்றுக்கொள்வதில் இவ்விரு  சாராருக்கும் இடையில் போட்டி உருவானது . இந்தவகையில் இந்துசமுத்திர ஆதிக்கத்தைத் தமதாக்கிக் கொள்வதில் இலங்கையின் முக்கியத்துவத்தினை உணர்ந்த ஆங்கிலேயரும் பிரான்சியரும் திருகோணமலைத் துறைமுகத்தின் மீது தமது கவனத்தைச் செலுத்த ஆரம்பித்தனர்.