திணை
உலகில் உள்ளவற்றை பகுத்தறிவை திணை எனப்படும். இது இருவகைப்படும்.
உயர்திணை - ‘மனிதரைக் குறிக்கும்’
எ+கா: இறைவன், தம்பி
அஃறிணை - ‘மனிதர் அல்லாதவை’
எ+கா: மாடு, மேசை
பகுத்தறியும் திறன் கொண்ட உயிருள்ளவைகள் உயர்திணையிலும் , பகுத்தறியும் திறனற்ற உயிருள்ளவைகள் மற்றும் உயிரற்றவைகள் அஃறிணையிலும் அடங்கும் .
யார்? என்னும் வினாவுக்கு விடையாக வருவது உயர்திணை.
எ+கா: யார் பள்ளிக்கு செல்கிறார்கள்?
மாணவர்கள்
என்ன? எது? என்னும் வினாக்களுக்கு விடையாக வருவன அஃறிணை.
எ+கா : மாடு என்ன சாப்பிடுகிறது?
புல்
மக்களுக்கு பிடித்த விலங்கு எது?
நாய்
விதிவிலக்காக சில சொற்கள் இரு திணைகளும் பொருந்தும் .
எ+கா: தாய், தந்தை, பிள்ளைகள்