ஒல்லாந்தர்கள் உடன்படிக்கையை மீறி செயற்படல்
ஒல்லாந்தர் 1638 ஆம் ஆண்டு உடன்படிக்கையை மீறி போர்த்துக்கேயர்களிடமிருந்து கைப்பற்றிய கோட்டைகளை அரசனிடம் ஒப்படைக்க மறுத்தத்தோடு தமது படை வீரர்களை அந்த கோட்டைகளில் நிறுத்தியும் வைத்தனர்.
மேலும் கொழும்பு , மாத்தறை, நீர்கொழும்பு,
கற்பிட்டி, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் கோட்டைகளை நிறுவினர். அப்பிரதான கோட்டைகள் தவிர்ந்த ஆணையிறவு, பருத்தித்துறை , ஊர்காவற்றுறை போன்ற பிரதேசங்களிலும் கோட்டைகள் பல அவர்களால் நிர்மாணிக்கப்பட்டன.
ஒல்லாந்தர் 1658 தொடக்கம் 1796 வரை கண்டி இராசதானியுடன் தூதுத் தொடர்பு , கடிதப் பரிமாற்றம் போன்ற தொடர்புகளை வைத்திருந்ததுடன் , சந்தர்ப்பம் வாய்த்த பொழுது அந்த இராசதானியை ஆக்கிரமிக்கவும் தயங்கவில்லை.
போர்த்துக்கேயருக்குப் பதிலாக வேறு ஐரோப்பிய இனத்தவரை வரவழைத்தமையால் " இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கியது போல் " என்ற உவமைத்தொடர் உருவானது.