Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

ஒல்லாந்தர்கள் உடன்படிக்கையை மீறி செயற்படல்

ஒல்லாந்தர் 1638 ஆம் ஆண்டு உடன்படிக்கையை மீறி போர்த்துக்கேயர்களிடமிருந்து கைப்பற்றிய கோட்டைகளை அரசனிடம் ஒப்படைக்க மறுத்தத்தோடு தமது படை வீரர்களை அந்த கோட்டைகளில் நிறுத்தியும் வைத்தனர்.

மேலும் கொழும்பு , மாத்தறை, நீர்கொழும்பு, 

கற்பிட்டி, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் கோட்டைகளை நிறுவினர். அப்பிரதான கோட்டைகள் தவிர்ந்த ஆணையிறவு, பருத்தித்துறை , ஊர்காவற்றுறை போன்ற பிரதேசங்களிலும் கோட்டைகள் பல அவர்களால் நிர்மாணிக்கப்பட்டன.

ஒல்லாந்தர் 1658 தொடக்கம் 1796 வரை கண்டி இராசதானியுடன் தூதுத் தொடர்பு , கடிதப் பரிமாற்றம் போன்ற தொடர்புகளை வைத்திருந்ததுடன் , சந்தர்ப்பம் வாய்த்த பொழுது அந்த இராசதானியை ஆக்கிரமிக்கவும் தயங்கவில்லை. 

போர்த்துக்கேயருக்குப் பதிலாக வேறு ஐரோப்பிய இனத்தவரை வரவழைத்தமையால் " இஞ்சி கொடுத்து மிளகாய் வாங்கியது போல் " என்ற உவமைத்தொடர் உருவானது.


This content is licensed under
CC BY-SA 4.0 What does that mean? serlo.org