சமூகப் பண்பாட்டுத் தாக்கங்கள்
ஒல்லாந்தர் 138 வருடங்கள் இலங்கையின் கரையோரப் பிரதேசத்தை ஆட்சி செய்தனர். அவர்களது ஆட்சியால் சமூகப் பண்பாடுகள் எமது நாட்டிலும் பல துறைகளில் தாக்கம் செலுத்தின. அவற்றைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்.
♦ உரோமக் கட்டடக் கலையைப் பின்பற்றி விறாந்தை , மேல்மாடி , தூண்கள் , உயர்ந்த கூரை என்பவனவற்றைக் கொண்ட வீடுகள் அமைத்தல்.
♦ பலவித உணவு வகைகள் அறிமுகமாதல்.
எ+கா - அணிச்சல் (கேக்) , அச்சாறு , கொக்கிஸ்
♦ நீதிமன்ற முறை அறிமுகமாதல்.
♦ சமுதாயத்தில் பறங்கியர் என்ற இனம் தோற்றம் பெறல்.
♦தமிழ் , சிங்கள மொழ ிகளில் பல டச்சுச் சொற்கள் கலந்தமை .
எ+கா :- அலுமாரி , கேத்தில் , கக்கூஸ் , ஜன்னல் , சாக்கு , இலாச்சி , துட்டு , தோப்பு
Loading