Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

சமூகப் பண்பாட்டுத் தாக்கங்கள்

ஒல்லாந்தர் 138 வருடங்கள் இலங்கையின் கரையோரப் பிரதேசத்தை ஆட்சி செய்தனர். அவர்களது ஆட்சியால் சமூகப் பண்பாடுகள் எமது நாட்டிலும் பல துறைகளில் தாக்கம் செலுத்தின. அவற்றைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்.

♦ உரோமக் கட்டடக் கலையைப் பின்பற்றி விறாந்தை , மேல்மாடி , தூண்கள் , உயர்ந்த கூரை என்பவனவற்றைக் கொண்ட வீடுகள் அமைத்தல்.

♦ பலவித உணவு வகைகள் அறிமுகமாதல்.

 எ+கா - அணிச்சல் (கேக்) , அச்சாறு , கொக்கிஸ் 

♦ நீதிமன்ற முறை அறிமுகமாதல்.

♦ சமுதாயத்தில் பறங்கியர் என்ற இனம் தோற்றம் பெறல்.

♦தமிழ் , சிங்கள மொழிகளில் பல டச்சுச் சொற்கள் கலந்தமை .

எ+கா :- அலுமாரி , கேத்தில் , கக்கூஸ் , ஜன்னல் , சாக்கு , இலாச்சி ,  துட்டு , தோப்பு 

Loading


This content is licensed under
CC BY-SA 4.0 What does that mean? serlo.org