பொருளாதார , சமூகப் பண்பாட்டு நடவடிக்கைகள்
ஒல்லாந்தரின் பொருளாதார நடவடிக்கைகள்
ஒல்லாந்தரின் கீழிருந்த ஏனைய ஆசிய நாடுகளை விட இலங்கையில் சிறந்த கறுவா விளைவதை அவர்கள் அறிந்திருந்தனர் . எனவே கறுவாப் பயிர்ச்செய்கை , கறுவா உரித்தல் , கறுவா வியாபாரம் என்பவற்றில் அதிக ஆர்வம் காட்டினர்.
கறுவா தவிர பாக்கு , முத்து , யானைத்தந்தம் , மிளகு ,சாதிக்காய் , ஏலம் , யானை , தேன் , மெழுகு என்பவற்றின் மூலமும் ஒல்லாந்தர் இலாபம் அடைந்தனர் . இவை தவிர நிலங்களிருந்து அறவிடப்பட்ட வரியின் மூலமும் இலாபம் பெற்றனர்.
இவர்களது ஆட்சி காலத்தில் வாசனை திரவியங்கள் தொடர்பான பயிரச்செய்கைகளை முன்னேற்றுவதற்கும் நெசவுத் தொழில், துணிகளுக்கு சாயமிடுதல் , ஓடு , செங்கல் தயாரித்தல் ஆகிய கைத்தொழில்களை ஊக்குவிக ்கவும் பங்களிப்பு செய்தனர்.
சமய மற்றும் கல்வி நடவடிக்கைகள்
புரட்டஸ்தாந்து மதம் ஒல்லாந்தரது மதமாக விளங்கியதுடன் அதனை மக்களிடையே பரப்புவதற்கு ஒல்லாந்திலிருந்து பாதிரிமாரை வரவழைத்தனர்.
ஒல்லாந்தரின் கீழிருந்த கொழும்பு , காலி , யாழ்ப்பாணம் , அச்சுவெலி மற்றும் மணற்காடு போன்ற பல பிரதேசங்களிலும் ஒல்லாந்தரால் நிர்மாணிக்கப்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்கள் அல்லது அவற்றின் சிதைவுகளைத் தற்போதும் நாம் காணக்கூடியதாயுள்ளது.
ஒல்லாந்தர்கள் பல கிராமங்களுக்கென ஒரு பாடசாலையை நிறுவி அப்பிரதேசத்தின் பிள்ளைகளை அப்பாடசாலைக்குக் கட்டாயமாக வரும்படி கூறினர். புரட்டஸ்தாந்து சமயத்திற்குப் பாடசாலைக் கலைத்திட்டத்தில் பிரதான இடம் அளிக்கப்பட்டது . இது தவிர தாய்மொழி , சங்கீதம் , இறையியல் போன்ற பாடங்கள் கற்பிக்கப்பட்டதுடன் முறையான பரீட்சை முறையும் ஆரம்பமானது.
கி.பி.1739 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் முதன்முதலாக அச்சியந்திரமொன்றை இந்நாட்டிற்குக் கொண்டுவந்ததுடன் அதன் மூலம் வேதாகமத்தின் சில பகுதிகளை அச்சிட்டு விநியோகித்தனர்.
Loading