ஆசியாவுக்கு வருவதற்கான காரணம்
(ஒல்லாந்து இன்று நெதர்லாந்து என அழைக்கப்படுகிறது).
16 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர் ஆசியாவிலிருந்து கொண்டுசென்ற கறுவா, பாக்கு, மிளகு, சாதிக்காய், ஏலம், தேன் போன்ற போர்த்துக்கலில் லிஸ்பன் துறைமுகத்தில் விலை கொடுத்து வாங்கிய ஒல்லாந்தர், அவற்றை ஐரோப்பிய நாடுகளுக்கு விற்கும் வியாபாரம்மொன்றை மேற்கொண்டனர். ஒல்லாந்து அக்காலத்தில் ஸ்பானியரின் ஆட்சிக்கு கீழ் இருந்தது. ஸ்பானியர்கள் உரோமன் கத்தோலிக்கர்களாக இருந்ததுடன் ஒல்லாந்தர் புரட்டஸ்தாந்து மதத்தினராக இருந்தனர்.
மத ரீதியாக இருப்பிருவினரிடையேயும் கருத்து முரண்பாடுகள் நிலவியதால் , ஒல்லாந்தர் ஸ்பானியருக்கு எதிராகச் சுதந்திரப் போராட்டத்தை 1568ஆம் ஆண ்டு ஆரம்பித்திருந்தனர் . அத்தோடு ஸ்பானிய மன்னனான இரண்டாம் பிலிப் அரச உரிமையொன்றின் மூலம் போர்த்துக்கல்லின் அரசனானதால் ஒல்லாந்தருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அவனுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் விளைவாக ஒல்லாந்தர் லிஸ்பன் துறைமுகத்திற்கு வருவதை இரண்டாம் பிலிப் மன்னன் தடைசெய்தான்.
இவ்வாறு ஒல்லாந்தரது கப்பல்கள் லிஸ்பன் துறைமுகத்திற்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. ஆகையால் அவர்களது நிறுவனத்திற்கு வாசனைப் பொருட்களைப்பெற்றுக் கொள்வதற்கு உற்பத்தி செய்த ஆசிய நாடுகளுக்கு வருவதைத் தவிர வேறு வழி அவர்களுக்கு இருக்கவில்லை.
போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வந்து ஒரு நூற்றாண்டு காலம் வரை கடல்வழித் தொடர்பான விளக்கத்தை மற்ற ஐரோப்பியர்கள் தெரிந்து கொள்வதைத் தடைச ெய்வதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டனர் .எனினும் ஒல்லாந்தர் , ஒற்றர்கள் மூலமும் ஏனைய வழிகளிலும் 1595 ஆம் ஆண்டளவில் போர்த்துக்கேயர் ஆசியாவுக்கு வந்த கடல்வழியை அறிந்துகொண்டனர்.