Serlo Logo அனைவருக்கும் திறந்த உரிமம் உள்ள ஓர் இணையத்தளம்

இலங்கைக்கு வருதல்

1602 ஆம் ஆண்டு ஜோரிஸ் வான் ஸ்பில்பேர்ஜன் என்னும் ஒல்லாந்துத்  தளபதி மூன்று கப்பல்களுடன் இலங்கையின் கிழக்குப் பகுதிக்கு வந்து  மட்டக்களப்பில் தரையிறங்கினான் .

அவன் கண்டி  இராசதானிக்குச் சென்று 1602 ஆம் ஆண்டு முதலாம் விமலதர்மசூரியனைச் சந்தித்தான் . இக்காலகட்டத்தில் போர்த்துக்கேயரின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து இருந்த மன்னன் போர்த்துக்கேயரை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு ஒல்லாந்தரின் துணையைப் பெற அவன் விருப்பம் தெரிவித்தான் . எனினும் அதன் பின்னர் வந்த தூதுக்குழுக்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் போர்த்துகேயரினை வெளியேற்றுவது தொடர்பான விடயத்தில் கண்டியை ஆண்ட மன்னர்கள் தோல்வியுற்றனர்.

Loading


This content is licensed under
CC BY-SA 4.0 What does that mean? serlo.org