தமிழ் எழுத்துகள்
தமிழில் மொத்தமாக 247 எழுத்துகள் உள்ளன. இவை முதலெழுத்துகள் (30), சார்பெழுத்துகள் (216), ஆய்த எழுத்து (1) என்று மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.
முதலெழுத்துகள்
முதலெழுத்துகள் உயிரெழுத்துகள் (12) மெய்யெழுத்துகள் (18) என இரண்டு வகைப்படும். உயிரெழுத்துகள் அ , ஆ , இ , ஈ , உ , ஊ , எ , ஏ , ஐ , ஒ , ஓ , ஒள என பன்னிரண்டு உள்ளன . மெய்யெழுத்துகள் க் , ங் , ச் , ஞ் , ட் , ண் , த் , ந் , ப் , ம் , ய் , ர் , ல் , வ் , ழ் , ள் , ற் , ன் என பதினெட்டு உள்ளன.
உயிரெழுத்துகள் குற்றெழுத்துகள் (5) , நெட்டெழுத்துகள் (7) என இரண்டு வ கையாகப் பிரிக்கப்படுகின்றன.
குற்றெழுத்துகள் / குறில் எழுத்துகள்: அ , இ , உ , எ , ஒ.
நெட்டெழுத்துகள் / நெடில் எழுத்துகள்: ஆ , ஈ, ஊ , ஏ , ஐ , ஓ , ஒள .
எழுத்துகளை உச்சரிக்கும் கால அளவைக் கொண்டே அவை நெடில் குறில் எனப் பிரிக்கப்படுகின்றன.
எ + கா: அம்மா, ஆலமரம்
இல்லம் - ஈட்டி
உணவு – ஊசி
இதில் 'அ, இ, உ ' என்னும் எழுத்துகள் குறுகிய ஓசையுடனும் 'ஆ, ஈ, ஊ' என்னும் எழுத்துகள் நீண்ட ஓசையுடன் உச்சரிக்கப்படுகின்றன.
மெய்யெழுத்துகளை வல்லினம் (6) , மெல்லினம் (6) , இடையினம் (6) என வகுக்கலாம்.
வல்லினம்: க் , ச் , ட் , த் , ப் , ற்
மெல்லினம்: ங் , ஞ் , ண் , ந் , ம் , ன்
இடையினம்: ய் , ர் , ல் , வ் , ழ் , ள்
சார்பெழுத்துகள்
சார்பெழுத்துகளை உயிர்மெய் எழுத்தகள் என்றும் அழைக்கலாம். உயிரெழுத்துகள் பன்னிரண்டும் மெய்யெழுத்துகள் பதினெட்டும் சார்ந்து வருவதால் சார்பெழுத்துகள் என்ற பெயர் உருவாகியது
(12 x 16 = 216) .
எ + கா: க் + அ = க
ம் + உ = மு
ள் + எ = ளெ
ஆய்த எழுத்து
ஆய்த எழுத்து (1): ஃ
மேற்கூறிய அனைத்து எழுத்துகளும் சேர்ந்ததே தமிழ் நெடுங்கணக்கு என்று அழைக்கப்படுகின்றது.
